அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.. அலறியடித்து ஓட்டம்..

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, அருவில் இருந்து திடீரென்று 8 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு ஒன்று விழுந்தது. இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தெறித்து ஓடினர். தொடர்ந்து, அருவியில் இருந்து விழுந்த மலைப் பாம்பு அங்கிருந்து நகர்ந்து சென்றது. உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்று மலைப் பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி