இஸ்ரேல், லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் காயமடைந்தனர். ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்பொல்லாஹ் அமைப்பு, ஈரான் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது.