பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? - தவெக தலைவர் விஜய் விமர்சனம்

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் போதை கும்பல்கள் சுதந்திரமாக வன்முறையில் ஈடுபட அனுமதிப்பதுதான் பொறுப்புமிக்க ஆட்சியா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் கோபத்திலும் கொந்தளித்து வருவதாக அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், போதை புழக்கத்தால் அரங்கேறும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களை தடுக்க அரசு தவறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி