போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "முருகன் மாநாட்டிற்கும் நிகிதாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது" என்று பேட்டியளித்துள்ளார்.