இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஜன.8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும், “இதன் காரணமாக ஜன.09 முதல் ஜன.12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஜன.10 மற்றும் 11ஆகிய தேதிகளில் கடலோர, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது” என கணித்துள்ளார்.
நன்றி: சன்நியூஸ்