இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்தனர், 320 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் பலியாகி, 53 பேர் காயமடைந்தனர். இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. டெல் அவிவில் மக்கள் பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தனர்.