400 பேரை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்

பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மைசூரு வளாகத்தில், புதிதாக 400 பேர் பணியில் சேர்ந்து பயிற்சிப் பெற்று வந்தனர். இந்நிலையில், அந்த 400 பயிற்சியாளர்களையும் அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இரண்டரை வருடம் காத்திருப்புக்கு பின் பணியில் சேர்ந்த அவர்கள் தொடர்ச்சியாக 3 மதிப்பீட்டு தேர்வுகளில் தோல்வியுற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “எங்களை தோல்வியடை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்வு கடினமாக இருந்தது” என பணியை இழந்தவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி