உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவை விட இந்தியா மிகவும் வலுவான நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைப்பான Assocham தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் 2.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்த நிலையில், இந்தியாவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.5 சதவீதமாக மட்டுமே கட்டுக்குள் பதிவாகியுள்ளது. இதனால் வரவிருக்கும் நிதிக்கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் RBI வட்டி விகிதங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.