கடல், வான் வழியாக இந்தியா-ஆப்கன் வர்த்தகம் செய்ய முடிவு

ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் சாலைகளை அடிக்கடி மூடுவதால், கடல் மற்றும் வான்வழியாக வர்த்தகத்தை தொடர இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அதன்படி, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் நகரங்களிலிருந்து காபூலுக்கு 2 சிறப்பு சரக்கு விமானங்கள் மூலம் இனி வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி