முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிக்கும்போது, ஒரு டிக்கெட்டில் உள்ள பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது அசல் அடையாள சான்றை காண்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அடையாள சான்று சமர்ப்பிக்க தவறினால், அந்த டிக்கெட்டில் உள்ள அனைத்து பயணிகளும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களாக கருதப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். மேலும், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயணிப்போர் அதற்கான துணை சான்றுகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.