அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக, தான் இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (நவ.10) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக கூட்டணியில் இருந்தாலும், நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்” என தெரிவித்துள்ளார். மேலும், “அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர்” என்றார். முன்னதாக, பாஜக - அதிமுக கூட்டாக ஆட்சி அமைக்கும் என்பதுபோன்ற செய்திகள் வெளியாகின.