அலுவலக வேலையாக செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு காதலியுடன் தாய்லாந்துக்கு சென்ற மலேஷிய கணவர், மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். தாய்லாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கணவரை தொடர்புகொள்ள முடியாததால், கணவரின் தோழியிடம் மனைவி உதவி கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, கணவரின் தோழி தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றபோது, கணவர் காதலியுடன் இருந்தது தெரியவந்துள்ளது.