மதுரை சமயநல்லூரில் மனைவி மற்றும் மச்சினிச்சியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, "24 மணி நேர பாலியல் சேவை" என கணவரே சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் தொடர்ந்து வந்த பாலியல் அழைப்புகள் குறித்து முறையிட்ட மனைவியை, கணவரும் அவரது தாயாரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சமயநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.