செங்கல்பட்டு மதுராந்தகத்தை சேர்ந்த சரண் (24)–மதுமிதா (19) காதலித்து 4 மாதங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பிறகு, மதுமிதா அடிக்கடி ஒருவருடன் செல்பேசியில் பேசியது சரணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி தகராறு அதிகரித்தது. நேற்று (நவ.19) சென்னேரி பகுதியில் உள்ள மலைக்கோவிலுக்கு அழைத்து சென்ற சரண், மறைத்து வைத்த கத்தியால் மனைவியின் கழுத்தறுத்து கொன்றார். போலீசார் மதுமிதா உடலை மீட்டு, சரணை கைது செய்துள்ளனர்.