12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (வயது 17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தான் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் வீட்டில் யாரும் இல்லாதபொழுது நேற்று(மே 9) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் 500க்கும் மேல் மதிப்பெண் எடுப்போம் என நினைத்திருந்த நிலையில் 494 மதிப்பெண் மட்டுமே எடுத்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி