மட்டன் கறி சமைக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவன்

தெலங்கானாவின் மஹபூபாபாத் நகரில் வசித்து வந்தவர் மலோத் கலாவதி (35). மட்டன் கறி சமைக்கவில்லை என கூறி கலாவதி உடன் அவர் கணவர் சண்டை போட்டுள்ளார். இந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் வாக்குவாதம் முற்றியதில் மனைவியை அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலாவதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த காவல் துறையினர் ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி