இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 கீழ், சொத்தின் உரிமையாளர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்தச் சொத்தை முதல் வாரிசுகள் என்று சொல்ல கூடிய மனைவி, மகன், மகள் அல்லது தாய் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம். அதுவே முதல் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2 ஆம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்கலாம்.