தமிழ்நாட்டில் உள்ள 717 மதுக்கடைகள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இந்நிலையில், இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், “முதலமைச்சர் விஜய் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 717 மதுக்கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. பல இடங்களில் மதுக்கடைகள் மூடாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் செயல்பட்டு வருகிறது” என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.