“விஜய் பதவியேற்று 15 நாட்களில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார்” என அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் கூறியுள்ளார். இன்று (மே.25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் ஆட்சி அமைக்கும்பொழுது முதல் கையெழுத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் முன்னெடுப்பார். அதேபோல் இப்போதைய முதலமைச்சர் விஜய்யும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்திருக்கிறார்” என்றார்.