திருநெல்வேலியில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் (24) வீட்டிற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார். பின்னர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல், கவின் வீட்டிற்கு, கனிமொழி எம்பி, நேரு உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் சென்றுள்ளனர். அங்கு, கவினின் தாய் மற்றும் தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் என்பவரும், அவரது தந்தை சிறப்புக் காவல் படை SI சரவணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: NewsTamilTV24x7