திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவிட உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி கே.கே.ரமேஷ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மலையை அளவிட்டதில் முரண்பாடுகள் இருப்பதால், 5 ஏக்கர் பரப்பளவை மீண்டும் அளவிட அரசுத் தரப்பில் 4 வாரக் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, விசாரணையை ஆகஸ்ட் 14-க்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி