2014ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட வழக்கில், குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து திருமாவளவனை வழக்கிலிருந்து விடுவித்தார்.