தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் இன்று (நவ., 22) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.