காது கேளாமல் போவது வயதானவர்களுக்கு சாதாரணப் பிரச்சனை அல்ல; இது நினைவாற்றல் மற்றும் மூளையை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காது கேளாதவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான ஆபத்து அதிகம் என்றும், வார்த்தைகளை புரிந்துகொள்ள மூளை அதிகமாக செயல்படுவதால் நினைவாற்றல் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கேட்கும் கருவிகளை பயன்படுத்துவோருக்கு மறதி நோய் வரும் ஆபத்து குறைவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.