கடலூர் மாவட்டம் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் நெய்வாசல் கிராமம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிதம்பரம், காட்டுமன்னார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
நன்றி: தந்தி டிவி