TNPSC Group 2, 2A தேர்வின் 828 பணிகளுக்காக இன்று (பிப்.7) நடைபெற இருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில இளைஞரணி தலைவர் SG.சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல முறை TNPSC தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.