திருமணம் ஆகாமல் முதிர் வயதை அடைந்த ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக தமிழக அரசு ‘திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்’ கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் 50 வயதுக்கு மேற்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற இ-சேவை மையங்கள், நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.