ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அரசின் சஞ்சார் சாத்தி(Sanchar Saathi) செயலியை பயனர்கள் நீக்க, அழிக்க முடியாத வகையில் புதிய ஸ்மார்ட் போன்களில் நிறுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்காக 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே விநியோகத்தில் உள்ள மொபைல்களுக்கு அப்டேட்டுகள் மூலமாக செயலியை நிறுவுவதை உறுதி செய்யவும் அறிவுத்தப்பட்டுள்ளது.