தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்ட அரசாணை இன்று (ஜன., 10) வெளியானது. தமிழகத்தில் 01.04.2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகப் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.