தஞ்சை: ஒரத்தநாட்டில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு, பேருந்து நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியை நடத்துநர் சுதாகர் (47) பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் சுதாகர் கைது செய்யப்பட்டார்.