தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.28) காலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.121,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சவரனுக்கு மேலும் ரூ.2,800 உயர்ந்து ரூ.1,24,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனையான நிலையில், தற்போது மேலும் ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,550க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.