கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக இன்று (ஏப்.16) மீண்டும் உயர்ந்துள்ளது. புதன்கிழமையான இன்று ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஒரே நாளில் 1,650 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது, 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 98,100. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தமிழகத்திலும் தங்கத்தின் விலை உயரும் என கூறப்படுகிறது.