திமுக, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போல, தற்போதும் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பலரும் 5 சவரன் வரை நகைக்கடன் பெற விண்ணப்பித்து பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்போது போதிய நிதி இல்லை என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கடன் கோருவோரின் தொலைபேசி எண்களைப் பதிவு செய்து, வரிசைப்படி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.