பூண்டு என்பது இயற்கையான மருந்தாகக் கருதப்படும் ஒரு சக்திவாய்ந்த உணவுப் பொருள். தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. பூண்டில் உள்ள அலிசின் என்ற சத்து ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை மென்று சாப்பிடுவது நல்ல பலன் தரும்.