ஆபத்தான முறையில் கிடக்கும் குப்பை.. விளாசிய பெண் கவுன்சிலர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி ஏரியில் குப்பை கிடங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அளவுக்கு அதிகமாக குப்பைகைள் கொட்டிய மாநகராட்சி குப்பை வண்டியை பாபி கதிரவன் என்ற பெண் கவுன்சிலர் தடுத்து நிறுத்தினார். மாநகராட்சியின் பல வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகள் டன் கணக்கில் கொட்டப்படுவதால் பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாகி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை வண்டியை அனுப்பி வைத்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி