பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஊழல் புகாரில் சிக்கிய நார்வே முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீனுக்கு உயர்மட்ட தொடர்புகளை ஏற்படுத்தித் தந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட சில நாட்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம், எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.