முன்னாள் காங்கிரஸ் எம்.பி., குற்றவாளி என தீர்ப்பு

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தந்தை, மகனை கொன்ற வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து 1984-ல் டெல்லி சரஸ்வதி விஹாரில் நடந்த கலவரத்தில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோரை சஜ்ஜன் குமாரின் தூண்டுதலால் கலவரக்காரர்கள் எரித்துக்கொன்றனர். இதுதொடர்பான வழக்கில், 41 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம் பிப். 18இல் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி