சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா. இவர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 18) சைதன்யாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
நன்றி:NewsTamilTV24x7