இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, இபிஎஸ் மீதான புகார்களை உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், மார்ச் 14ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது.