முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.05 ல் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ. 5.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (ஏப்.15) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (ஏப்.16) காலை முதல் அமலுக்கு வருகிறது. கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி 15 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.