தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் வசிக்கும் பிந்து என்ற பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, பிந்துவுக்கு 2-வதாக ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 3-வதாக, அங்கித் சாகேத் என்பவரை காதலித்துள்ளார். தொடர்ந்து பிந்து, அங்கித் உடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனையறிந்த 2-வது காதலர், இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.