தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் பலி

ஹரியானா மாநிலம் குர்கான் செக்டார்-10 டெக்சந்த் நகரில் உள்ள தொழிற்சாலையில் இன்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் கொதிகலன் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு துறை மற்றும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி