ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியின் வாகனத்தை வழிமறித்த முன்னாள் காதலன் உள்ளிட்ட மூவர், மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி மணமகளை கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மணமகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கடத்தப்பட்ட பெண்ணை மீட்கவும் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.