சிவகிரி அருகே எலி மருந்தை குடித்து தொழிலாளி தற்கொலை

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த கரவலசை சேர்ந்தவர் துரைசாமி (59). இவர் அதேப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், கடந்த 8-ம் தேதி மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த துரைசாமி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 12) உயிரிழந்தார். இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி