பவானிசாகர் அணைக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. 

இதனால் இன்று (ஜூன் 14) காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.22 அடியாக உள்ளது. இன்று காலை அணைக்கு 3,055 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 855 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

இதைப் போல் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி