ஈரோடு: இன்று பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்புவரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகளில் தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் பள்ளிக் கழிப்பறை, வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை வரவேற்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். இன்று பள்ளித் திறப்பை முன்னிட்டு நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கடைவீதிகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி மூட்டைப் புத்தகம், ஸ்கூல் பேக், தண்ணீர் பாட்டில், ஷூ போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதேபோல் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வெளியூருக்குச் சென்றவர்கள் மீண்டும் ஈரோடு திரும்பி வருகின்றனர். 

இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவிலிருந்து வருகிறது. முன்பதிவு பஸ்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் பஸ்களில் இடம் பிடிக்கப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாகச் சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி