பெருந்துறை அருகே 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கோசல்காந்த் (22) பாலியல் தொந்தரவு அளித்ததால் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த இரு குடும்பத்தினரும் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி, நடந்த விவரங்களை கூறியதன்பேரில் கோசல்காந்த், அவரது தந்தை ரவிமுருகன் (60), தாயார் சரஸ்வதி (50), சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.