பெருந்துறை: அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வாழை இலை அறுத்து விற்பனை செய்து வரும் அவருக்கு, அப்பகுதியில் சொந்தமான வாழை தோட்டம் உள்ளது. வழக்கம் போல் நேற்று காலை வாழை இலை அறுப்பதற்காக, கோபாலகிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. 

அப்பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல் இருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, கோபாலகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி