ஈரோடு: வைக்கோல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம்

ஈரோடு காலிங்கராயன் பாசன வாய்க்காலையொட்டி பகுதிகளில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், இரண்டாம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதன் அறுவடை சில நாட்களாக நடைபெற்று வருகின்ற நிலையில், இன்னும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அறுவடை பாக்கியுள்ளது. 

இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதியில் நெல் விளைச்சல் அபரிமிதமாக இருந்ததால், வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வைக்கோல் விலை மளமளவென குறைந்து, கால்நடை வளர்ப்போருக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், வைக்கோல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி