இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: -ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையை பயன்படுத்தி, கனிராவுத்தர் குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய்வுபட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே, மீன்களின் இறப்பிற்கான காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதியினர் தெரிவித்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு